உத்தரப்பிரதேசத்தில் தக்காளி ஏற்றி வந்த வாகனம் வேகமாக வந்து மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டம் ரவுலி கல்யாண்பூர் கிராமத்தில் இன்று காலை தக்காளி ஏற்றி வந்த வாகனம் ஒன்று ரௌலி கல்யான்பூர் கிராமத்தின் அருகே வந்தபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த 8 பேர் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் நரேஷ் (35), அரவிந்த் (21), ராம்ஸ்வரூப் (25), சக்கா (32), சோம்தத் (25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பானுபிரதாப் (32) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், பகவன்தாஸ் (45) மற்றும் ராம்நாராயண் (50) ஆகியோர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ரௌலி கல்யாண்பூர் கிராமத்திற்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிபதி சுப்ரந்த் சுக்லா தெரிவித்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.